Friday, January 4, 2008

புதினா கொத்தமல்லி சாதம்


தேவையான பொருட்கள்:

பாஸ்மதி அரிசி அல்லது சோனா மசூரி அரிசி- 1 கப்
புதினா இலை
1 கப்
மல்லி இலை
½ கப்
வெங்காயம்
1 (பாதி அரைப்பதற்கு. பாதி வதக்குவதற்கு)
பச்சை மிளகாய்
2
இஞ்சிப்பூண்டு விழுது
1 தேக்கரண்டி
பட்டை
1 சிறியது
கிராம்பு
2
சோம்பு (பெருஞ்சீரகம்)
½ தேக்கரண்டி
தேங்காய் துருவியது
1 கப்
நெய், எண்ணெய் மற்றும் உப்பு- தேவையான அளவு

செய்முறை:

தேங்காய்ப்பால் எடுப்பது எப்படி?

  1. துருவிய தேங்காயை தண்ணீர் ஊற்றாமல் அரைத்துக் கொள்ளவும். பின் சூடான தண்ணீர் ஊற்றி நைசாக அரைத்துக் கொள்ளவும்.
  2. அரைத்த தேங்காயிலிருந்து பாலை வடிகட்டிக் கொள்ளவும். வடிகட்டுவதற்கு வடிகட்டி, துணி அல்லது கையை பயன்படுத்தலாம்.
  3. கொஞ்சம் கொஞ்சமாக சூடான தண்ணீரை அரைத்த தேங்காயில் ஊற்றி பாலை எடுக்கவும்.
  4. பால் முழுவதுமாக வரும் வரை மேலே உள்ள முறையை பின்பற்றவும்.

புதினா கொத்தமல்லி சாதம்:

  1. அரிசியை கழுவி தனியாக வைக்கவும்.
  2. பட்டை, சோம்பு மற்றும் கிராம்பை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். இதனுடன் பாதி வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் இஞ்ஞிப்பூண்டு விழுது சேர்த்து அரைத்துக் கொள்ளவும். முடிந்த வரை தண்ணீர் ஊற்றாமல் அரைத்துக் கொள்ளவும்.
  3. புதினா மற்றும் மல்லி இலையை சேர்த்து அரைத்து, புதினா மல்லி விழுது தயார் செய்து வைத்துக் கொள்ளவும்.
  4. தேங்காய் பால் ரெடியாக வைத்துக் கொள்ளவும்.
  5. ஒரு குக்கரில் நெய்யை ஊற்றி வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்.
  6. பின் வெங்காய விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும்.
  7. பச்சை வாசனை போன பின் புதினா மல்லி விழுதை சேர்த்து நன்றாக வதக்கவும்.
  8. பின் கழுவிய அரிசியை சேர்த்து வதக்கவும்.
  9. கடைசியாக தேங்காய்பால்,உப்பு, ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து கலக்கி விட்டு குக்கரை மூடி, 3 விசில் வந்தவுடன் இறக்கவும். (பாஸ்மதி அரிசி என்றால், ஒரு கப் அரிசிக்கு 1½ கப் தேங்காய் பால் ஊற்றவும். மற்ற வகை அரிசி என்றால், ஒரு கப் அரிசிக்கு 2 கப் தேங்காய் பால் ஊற்றவும். தேங்காய் பால் குறைவாக இருந்தால் தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம். விழுது அரைத்த தண்ணீரையும் சேர்த்துக் கொள்ளலாம்.)


தயிர் வெங்காயம் அல்லது உருளைக் கிழங்கு வறுத்து சூடாக பரிமாறவும்.

No comments: