Sunday, January 6, 2008

பச்சை பட்டாணி குழம்பு


தேவையான பொருட்கள்:

பட்டாணி- 1 கப்
வெங்காயம் – 2
தக்காளி – 1
துருவிய தேங்காய் – 3 கரண்டி
சீரகம்- 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – சிறிதளவு
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
கொத்தமல்லி தூள் - 1/2 கரண்டி
உப்பு, எண்ணெய்- தேவைக்கேற்ப

செய்முறை:


  1. வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  2. ஒரு வாணலியில் எண்ணெயை காய வைத்து சீரகம், நறுக்கிய வெங்காயம் ஒன்றை சேர்த்து வதக்கவும். அதேபோல் தக்காளியை சேர்த்து வதக்கவும் பின்னர் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கொத்தமல்லி தூள் சேர்க்கவும். இறுதில் துருவிய தேங்காய் சிறிது வதக்கி இறக்கவும்.
  3. மேலே வதக்கிய பொருட்களை அரைத்து வைத்துகொள்ளவும்.
  4. பின்னர் வாணலியில் எண்ணெயை காய வைத்து அதில் நறுக்கிய மற்றொரு வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். அதனுடன் உப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள பொருட்களை சேர்த்து வதக்கவும்.
  5. பட்டாணி மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஒரு கொதிவந்தவுடன் இறக்கவும்.

சாதம் மற்றும் சாப்பாத்திக்கு சிறந்தது.

1 comment:

marriage halls list in coimbatore said...

hi this is nice site this is very useful site bachelors thank you for sharing this. I think it will be tasty..