Wednesday, January 2, 2008

சர்க்கரை பொங்கல்

தேவையான பொருட்கள்:


பச்சரிசி 1 கப்
வெல்லம் துருவியது
1 ½ கப்
முந்திரி பருப்பு
7-10 (தேவைக்கேற்ப)
உலர்ந்த திராட்சை - 7-10 (தேவைக்கேற்ப)
நெய் - தேவைக்கேற்ப


செய்முறை:


  1. பச்சரிசி நன்றாக குழைய வேகும் அளவு தண்ணீர் ஊற்றி குக்கரில் வைத்து வேக விடவும். ஒரு கப் அரிசிக்கு, 3 கப் தண்ணீர் ஊற்றவும். அரிசி குழைந்திருப்பது மிகவும் அவசியம்.

  2. ஒரு வாணலியில் நெய்யை ஊற்றி, முந்திரி பருப்பு, உலர்ந்த திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்து தனியாக எடுத்து வைக்கவும்.

  3. அதே வாணலியில் 2 தேக்கரண்டி நெய் ஊற்றி, குழைந்த அரிசி மற்றும் துருவிய வெல்லம் சேர்த்து அடி பிடிக்காமல் கிண்டவும்.

  4. வெல்லத்தை நன்றாக அரிசியோடு சேர்த்து மசித்து விடவும்.

  5. இறக்கும் முன்பு வறுத்த முந்திரி, உலர்ந்த திராட்சை மற்றும் 2 தேக்கரண்டி நெய் சேர்த்து இறக்கி சூடாக பரிமாறவும்.

நெய் சுவையை கூட்டுவதிற்கு தேவையான முக்கியமான மூலப்பொருள். நெய்யின் அளவிற்கேற்ப சுவையும் மாறுபடும்.


ஆங்கிலத்தில் பார்க்க

1 comment:

Unknown said...

very tasty recipe i like this very mush taste was so good
good logo design in coimbatore