Thursday, December 20, 2007

போளி

தேவையான பொருட்கள்:

மைதா 1 கப்
கடலை பருப்பு
½ கப்
துருவிய தேங்காய்
3 கரண்டி
வெல்லம்
½ கப்

செய்முறை:

  1. கடலை பருப்பை குக்கரில் வேகவைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  2. மைதா மாவு, எண்ணெய், நீர் கலந்து சப்பத்தி மாவு பிசைவது போல் பிசைந்து கொள்ளவும்.
  3. வேக வைத்த கடலைப்பருப்பு,துருவிய தேங்காய்,வெல்லம் அனைத்தையும் ஒரு தேக்கரண்டி நெய் விட்டு ஒன்றாக பிசைந்து பூரணம் தயார் செய்து கொள்ளவும்.
  4. பிசைந்து வைத்த மைதா மாவில் சிறு சிறு உருண்டைகள் செய்து, மெல்லிய சப்பாத்திகளாக உருட்டிக்கொள்ளவும்.
  5. இரண்டு சப்பாத்திகளுக்கு நடுவில் பூரணத்தை வைத்து, சப்பாத்தியின் ஓரங்களை இணைத்து விடவும்.
  6. சப்பாத்திக் கல்லை காய வைத்து எண்ணெய் ஊற்றி, பூரணம் நிரப்பிய போளியை கல்லில் போட்டு இரு பக்கங்களும் பொன்னிறமானவுடன் எடுக்கவும்.

No comments: