Monday, December 24, 2007

ஆந்திர பருப்பு பொடி

தேவையான பொருட்கள்:
பொறிகடலை – 1 கப்
வேர்க்கடலை - 1/4 கப்
வரமிளகாய் – 20-25 என்னம் (அல்லது உங்கள தேவைக்கேற்ப சேர்க்கவும்)
பூண்டு – 10 – 15 என்னம் (அல்லது உங்கள் தேவைக்கேற்ப சேர்க்கவும்)
கறுவேப்பிலை - சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
  1. ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சூடேற்றி, எண்ணெய் ஊற்றாமல் பொறிகடலை, வேர்க்கடலை, வரமிளகாய் மற்றும் பூண்டு மற்றும் கறுவேப்பிலை சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
  2. வறுத்த பொருட்கள் ஆற விடவும்.
  3. பின்பு உப்பு சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
பருப்பு பொடி சூடான சாதம், இட்லி, தோசையுடன் மிகவும சுவையாக இருக்கும்.

No comments: