Thursday, December 20, 2007

பூண்டு குழம்பு

தேவையான பொருட்கள்:

வெங்காயம் 1
தக்காளி
2
பூண்டு
10-12 துண்டு
மஞ்சள் தூள்
சிறிதளவு
மசாலா தூள்
1½ கரண்டி
கடுகு, உளுத்தம்பருப்பு
1 தேக்கரண்டி
துருவிய தேங்காய்
3 கரண்டி
சோம்பு
½ தேக்கரண்டி
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை:

  1. ஒரு பாத்திரத்தில் பூண்டை வேக வைத்து எடுத்துக்கொள்ளவும்.
  2. ஒரு வாணலியில் எண்ணெயை சூடேற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, சோம்பு இடவும்.
  3. கடுகு,உளுத்தம்பருப்பு வெடித்ததும் கறிவேப்பிலை, வெங்காயம், பூண்டு சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
  4. பிறகு தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.
  5. தக்காளி நன்றாக வதங்கிய பின் மஞ்சள் தூள், மசாலா தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும்.
  6. பூண்டு வேக வைக்க பயன்படுத்திய நீரை சேர்த்து குழம்பை கொதிக்க விடவும்.
  7. குழம்பு ஓரளவு கெட்டியானவுடன் தேங்காயை அரைத்து தேங்காய்ப்பால் எடுத்து ஊற்றவும். ஒரு கொதி வந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கவும்.
பூண்டு குழம்பை சூடான சாதத்துடன் பரிமாறினால் மிகவும் சுவையாக இருக்கும்.

No comments: